Skip to main content

Posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_28

"உலகம் யாருக்கு?" சிறுகதையில், “எல்லாரும் அப்படித்தானே இருக்கிறார்கள்! உலகம் தனக்காகத்தான் இருக்கிறது என்று எவன்தான் நினைக்கவில்லை?”
Recent posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_27

"17ம் நம்பர் வீட்டு நாய்" சிறுகதையில், தன்னுடைய சுதந்திர வாழ்க்கையை நினைக்க நினைக்க அதற்குப் பேரானந்தமாக இருந்தது. குரைக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் தெருவெல்லாம் குரைத்துக் கொண்டே ஓடிவந்தது. தெருவோடு வந்த பையன் ஒருவன் நாய் குரைப்பதைப் பார்த்து பயந்து விட்டான். தன்னைக் கடிக்கத்தான் வருகிறது என்று நினைத்து ஒரு கல்லை எடுத்து நாயின்மேல் எறிந்தான். எறிந்த கல் நாயின்மேல் விழுவதற்கு முன்பாகவே கம்பியை நீட்டிவிட்டான். ஒரு கால் ஒடிந்து போய்விட்டது. சுற்றும்முற்றும் பையனைக் காணாததால், பலமாகக் குரைத்துக்கொண்டே 17ஆம் நம்பர் வீட்டுக்குள் நுழைந்தது நாய்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_26

"ஓட்டப் பந்தயம்" என்ற சிறுகதையில், அவன் நட்புக்கு எதைச் செய்தாலும் போதுமா? மேல்நாட்டில், பெலிக்கன் என்ற ஒரு பறவை தன் மார்பைக் குத்திக் குத்தி அதி்லிருந்த ரத்தத்தை எடுத்து குஞ்சுகளுக்கு உணவாக ஊட்டுமாம். அதுகூடப் பெரிய காரியமில்லை. நோய்வாய்ப்பட்ட என் ‘ஹூமாயூ’னுக்கு இந்த ‘பாபர்’ தன் எதிர்கால வாழ்வின் வெற்றி, ஆனந்தம் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தேன்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_25

“தவப்பயன்” என்ற சிறுகதையில், இன்னும் ‘நான்’ நசியவில்லை. ‘அவன்’ இன்னும் அவனாகத்தான் இருக்கிறான். ‘அவன்’, ‘நான்’ ஆகவில்லை. ‘நான்’, ‘அவன்’ ஆகவில்லை. கேவலம் தூலசரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டிவிடுமா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_24

“திரபுரம்” என்ற சிறுகதையில்… பஞ்சம் வந்துவிட்டது. பஞ்சம் வந்துவிட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமில்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது, ஓர் பஞ்சப் பிரதேசத்தைவிட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். தென்கோடியில் ஏதோ குபேரபட்டணம் இருப்பதாக அவர்களுடைய நினைப்பு. பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று. கணவன் பட்டினியினால் செத்தான். ஆனால் காலராவில் செத்தான் என்று மானத்துக்கு அஞ்சி பொய் சொன்னாள்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_23

“சிரிக்கவில்லை” என்ற சிறுகதையில்… சோம்பேறித்தனம் அவனுக்கு ஒரு சுகபோகம். அதிலும் இப்போது ரயில்வேயில் வேலையான்ன பிறகு, ஒருவாரம் ராத்திரி வேலையும்,ஒருவாரம் பகல் வேலையுமாகப் போய்விட்டதனால், ராத்திரி வேலை நாட்களில் பகலெல்லாம் உறங்குவான். பகல்வேலை நாட்களிலோ இரவில் உறங்குவதோடு நின்றுவிடுவது கிடையாது. பகலிலும் தூக்கம் வரும். எப்படிப்பட்ட காரியத்துக்குச சந்தர்ப்பம் கிடைத்தாலும், அந்தச் சந்தர்ப்பத்தைத் தூங்குவதற்குத்தான் பயன்படுத்துவான். பகலிலும் இரவிலும் கண்கள் சொருகிப்போய் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கும். அப்படி இருப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கும். சிலர் எப்படி இருந்தபோதிலும்கூட கவர்ச்சி மட்டும் அவர்களை விட்டுப் போகாமலே இருந்துவிடுகிறது அல்லவா?

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_22

“காடாறு மாதம்” என்ற கதையில், ஒரு சிந்தனைக்கும் அதை அடுத்துக் காரணமின்றி பிறக்கும் மற்றொரு சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை, கறுப்புக்கும் வெள்ளைக்கும் உ‌ள்ள ஒற்றுமைதான். அந்த இரண்டு சிந்தனைகளில் முக்கியத்துவம் நிறைந்த சிந்தனைகள் இரண்டு. ஒன்று: ஒரு தடவையாவது பிராந்தி குடித்துப் பார்ப்போமா? இரண்டு: யாராவது ஒரு மலையாளப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?