Skip to main content

Posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_11

“முருங்கைமர மோகினி” என்ற சிறுகதையில்… மனிதன் செத்துப்போன பிறகு அவனுடைய குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கும் மனித சமூகம், நல்ல பெருமாள் பிள்ளையினர ‘அத்தாகத்தி’யான நிலையைக் கண்டு, அந்த நிமிஷத்திலேயே அவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது.
Recent posts

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_10

“குழந்தையின் தியாகம்” என்ற சிறுகதையில்… அந்தப் பொல்லாத குழந்தை என்றோ இறந்திருக்கலாம். மதுரையிலோ, ரயிலிலோ இறந்திருந்தால் அதனுடைய மரணம் பயனற்றுப் போயிருக்கும்? தன் மகன் பெரிய வாலிபனாகி தன் துயரத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குப் பதிலாகத் தன் அறியாத இளம் பிராயத்திலேயே அந்தக் குழந்தை தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டது. இதை விடவா பெரிய தியாகத்தைப் பின்னால் சாதித்துவிடப் போகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_09

“பித்தளை வளையல்” என்ற சிறுகதையில்… மனிதனுடைய வாழ்வை தேவையும் அவசியமும் வந்து பாதித்துத் தூண்டும்போது, அவனுடைய கற்பனையும் புத்தியும் விசாலிப்பது இயற்கைதானே! உலகத்தில் சாரமும், அர்த்தமும் இல்லாமல் பொய்க்காரியங்களை, சமூகம் தெரிந்தும் கௌரவிக்கிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_08

“வள்ளியின் வாழ்க்கை”என்ற சிறுகதையில்… பனி, வெயில், பசி, தாகம் - இவற்றை உணரும் ஒரு மனித உடலை, சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! ஒரே மண்ணில், ஒரே விதமாய் பிறக்கும் மனித வர்க்கத்தின் வாழ்க்கையிலே எவ்வளவு வித்தியாசம்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_07

“வள்ளியம்மையின் அதிர்ஷ்டம்” என்ற சிறுகதையில்… ஜில்லாப்படத்தில் இடம்பெறத் தகுதியற்ற சிறு கிராமம் மணலூர். திருநெல்வேலி ஜில்லாவில், இருக்கிற இடம் தெரியாமல் சங்கரன்கோவில் ஸ்டேஷனுக்கு அரைமைல் தூரத்தில், நாகரீக வாழ்க்கைக்கு அநேக மைல்களுக்கு அப்பால் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு சிறுகுளங்களில் பெருகிய தண்ணீரால் அவ்வூரார் கொஞ்சம் நன்செய் சாகுபடி செய்து பிழைக்கிறார்கள். ஏதாவது ஒரு வருஷம் மழை கொஞ்சம் மட்டு என்றால் அதனால் ஏற்படும் கஷ்டத்தின் எதிரொலி மணலூரில்தான் கேட்கும்.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_06

“பைரவி” என்ற சிறுகதையில்… அப்பொழுது கருநீல நிறமுள்ள பறவையொன்று பறந்து வந்து வற்றியுள்ள குளத்துநீரைத் தன் சிறகால் அடித்துவிட்டு ஒருவிதமான, மோகனமான குரலில் கூவிவிட்டுச் சென்றது. நீரோடு விளையாடி வெகு குறுகிய நேரத்தில் அது அனுபவிப்பது பேரின்பம்! அதைப் போலவே எங்கள் தோழமையின் ஓரிடத்துறையும் வாழ்க்கையின்பமும் வெகு குறுகிய காலத்திற்குத்தான் என்று இப்பொழுது தெரிகிறது.

கு.அழகிரிசாமி சிறுகதைகள்_05

“விதவை” என்ற சிறுகதையில்… வீட்டை நெருங்கினான் ரகு, புகைவண்டிச் சக்கரங்கள் போல் அவன் கால்கள் விசையோடு ஓடின. அன்று, அந்த இரவிலே, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாட்டை, பாப்பா பாடுவது ரகுவின் காதில் விழுந்தது. அவன் அந்தப் பாட்டை மாறி மாறிப் பிரியத்தோடு பாடுவது பாரதி பாட்டு என்பதற்குத்தானா?