“முருங்கைமர மோகினி” என்ற சிறுகதையில்… மனிதன் செத்துப்போன பிறகு அவனுடைய குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கும் மனித சமூகம், நல்ல பெருமாள் பிள்ளையினர ‘அத்தாகத்தி’யான நிலையைக் கண்டு, அந்த நிமிஷத்திலேயே அவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது.
“குழந்தையின் தியாகம்” என்ற சிறுகதையில்… அந்தப் பொல்லாத குழந்தை என்றோ இறந்திருக்கலாம். மதுரையிலோ, ரயிலிலோ இறந்திருந்தால் அதனுடைய மரணம் பயனற்றுப் போயிருக்கும்? தன் மகன் பெரிய வாலிபனாகி தன் துயரத்தை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குப் பதிலாகத் தன் அறியாத இளம் பிராயத்திலேயே அந்தக் குழந்தை தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்துவிட்டது. இதை விடவா பெரிய தியாகத்தைப் பின்னால் சாதித்துவிடப் போகிறது.